Posts

வேண்டாமே விமர்சனம்

Image
தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர். இதனால் புண்ணியம் சேருமென கருதினர். ஒரு நாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரை பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டார். மன்னன் சிரித்தபடியே போய்விட்டான். மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர் “மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா?  அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” என சொல்லி விட்டு சென்றார். மன்னன் நடுங்கி விட்டான். தர்மம் செய்து, தன் பாவங்களை குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து தங்கினான். இளம்பெண்களை வரவழைத்து, திருமணத்திற்குரிய நகை, பணம் கொடுத...

பணிவு தந்த பலன்

Image
கிருபாச்சாரியாரின் குருகுலத்தில் பாண்டவர்களும், கவுரவர்களும் பந்து விளையாடி கொண்டிருந்தனர். பந்து ஒரு கிணற்றுக்குள் விழுந்தது. அப்போது அழுக்குத்துணி உடுத்தி மீசை, தாடியுடன் வந்த துரோணர், ''கிணற்றை சுற்றி ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்?'' என்றார். அவரது தோற்றம் துரியோதனனுக்கு அலட்சியத்தை ஏற்படுத்தியது. ''நான் எதற்கு நின்றால் என்ன?'' என்றான் அவன். ஆனால் அர்ஜுனன், ''சுவாமி... கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க வழி தெரியாமல் தவிக்கிறோம்'' என்றான் பணிவுடன். துரோணர் ஆர்வத்துடன் ''தம்பி உன் பெயர் என்ன?'' என்றார். ''என் பெயர் அர்ஜுனன். குருகுலத்தில் படிக்கிறேன்'' என்றான். ''நல்லது... நீருக்குள் விழுந்த பொருளை எடுக்கும் மந்திர வித்தையை இப்போதே உனக்கு கற்று தருகிறேன்'' என்று சொல்லி அங்கிருந்த புற்களை பறித்தார். அர்ஜுனன் காதில் மந்திரத்தை உபதேசம் செய்து புற்களை அவனிடம் கொடுத்து, ''அர்ஜுனா! மந்திரத்தை ஜெபித்தபடி ஒவ்வொரு புல்லாக கிணற்றுக்குள் வீசு'' என்றார். ...

நீதிக்கு தலை வணங்கு

Image
மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியன் நகர சோதனைக்காக மாறுவேடத்தில் புறப்பட்டார். கீரந்தன் என்னும் அந்தணர் வீட்டில் பேசும் குரல் கேட்டது. அவர் தன் மனைவியிடம், '' நாளை காசி யாத்திரை செல்கிறேன். திரும்பி வர நாளாகும். நம் மன்னரின் நல்லாட்சியில் வாழும் நமக்கு குறையேதுமில்லை'' என்றார். இதை கேட்ட மன்னர் அந்தணர் வீட்டை கண்காணித்து வந்தார். ஒரு நாள் நகர்வலம் வந்தபோது அந்த வீட்டில் ஏதோ ஆண்குரல் ஒலிப்பது கேட்டு கதவை தட்டினார். கீரந்தன் காசியிலிருந்து ஊர் திரும்பியிருந்ததை அவர் அறியவில்லை. ''ராத்திரியில் கதவைத் தட்டுபவன் யார்?'' என்று உள்ளே இருந்த கீரந்தன் கேட்டார்.  சுதாரித்த மன்னர், சந்தேகம் வராத விதத்தில் எல்லா வீட்டுக்கதவையும் தட்டி விட்டு ஓடினார்.  திருடன் வந்ததாக கருதிய அப்பகுதி அந்தணர்கள், மன்னரிடம் முறையிட்டனர். குற்றவாளி பிடிபட்டால் என்ன தண்டனை தரலாம்?'' என மன்னர் கேட்க ''கையை வெட்டலாம்'' என்றனர். ''அப்படியா... கதவைத் தட்டியது நான் தான்'' என்ற மன்னர், யாரும் எதிர்பாராத விதத்தில் வாளால் தன் கையை...

தேடி வந்த லட்சுமி

Image
மகாருத்ரம் என்ற காட்டில் தேவகர்ப்ப மகரிஷி ஆஸ்ரமம் இருந்தது. அங்குள்ள தோட்டத்தில் துளசி, மந்தாரை, மல்லிகை செடிகள் இருந்தன. சில பசுக்களையும் பராமரித்து வந்தார். மங்களகரமான சூழல் நிலவியதால் மகாலட்சுமியின் பார்வை அங்கு விழுந்தது. போதாக்குறைக்கு விஷ்ணுவுக்கு நைவேத்யம் செய்த பாலையே, உணவாக ஏற்பார் மகரிஷி. இதனால் லட்சுமி, அவரை நேரில் காண ஆஸ்ரமத்திற்கே வந்து விட்டாள். “மகரிஷியே! உம் பக்தியை மெச்சுகிறேன். செல்வ வளமுடன் வாழ்வீராக!” என வாழ்த்தினாள். “தாயே! துறவிக்கு செல்வம் எதற்கு? பிறப்பற்ற முக்தியே என் விருப்பம்” என்றார்.  “முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் நீர் செல்வந்தனாக வாழ்ந்தாக வேண்டும். அதன் பின்னரே உமக்கு முக்தி உண்டாகும்” என்று சொல்லி மறைந்தாள். லட்சுமியின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும் என தீர்மானித்த மகரிஷி ஆஸ்ரமத்தை விட்டு கிளம்பினார்.  ஓரிடத்தில் பல்லக்கு, பரிவாரம், படை வீரர்கள் என பெருங்கூட்டம் இருந்தது. காட்டுக்கு வேட்டையாட வந்த அந்நாட்டின் மன்னர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் ரத்தின கிரீடம் பட்டுத்துணியில் வைக்கப்பட்டிருந்தது. மகரிஷி...

வாணி செய்த அற்புதம்

Image
காசி யாத்திரை சென்ற குமரகுருபரர், கங்கைக்கரையில் மடம் ஒன்று அமைக்க எண்ணினார்.  அப்போது (17 ம் நூற்றாண்டு) மொகாலய மன்னரின் ஆட்சி அங்கிருந்தது. காசி உள்ளிட்ட பகுதியை நவாப் தாரா ஷிக்கோஹ் என்பவர் நிர்வகித்தார். அவரைச் சந்திக்க விரும்பிய குமரகுருபரர், தன் தவசக்தியால் சிங்கம் ஒன்றை வசப்படுத்தினார். அதன் மீதேறி புறப்பட்டார். அவரைக் கண்ட நவாப் வியப்பில் ஆழ்ந்தார். ஆனால், ஒருவரை ஒருவர் பார்த்தாலும், ஏதும் பேச முடியவில்லை. காரணம் குமரகுருபரருக்கு இந்தி தெரியாது. இக்கட்டான இந்நிலையில் கலைவாணியை தியானித்து 'சகல கலாவல்லி மாலை' என்னும் பாடல் பாடினார். மனம் குளிர்ந்த தேவியும்,  குமரகுருபரருக்கு இந்தி பேசும் புலமை அளித்து அற்புதம் நிகழ்த்தினாள்.  அதன் பின் நவாப்பிடம், இந்தியில் பேசி மடம் கட்டுவதற்குரிய இடத்தை மானியமாக பெற்றார் குமரகுருபரர். கங்கைக் கரையில் கேதார கட்டத்தில் இம்மடம் உள்ளது.

கிழங்கு விற்ற சரஸ்வதி

Image
சோழன் நடத்திய விருந்தில் கம்பர், அவரது மகன் அம்பிகாபதி, ஒட்டக்கூத்தர் பங்கேற்றனர். அம்பிகாபதியும், சோழனின் மகள் அமராவதியும் காதல் கொண்டிருந்தனர். அம்பிகாபதிக்கு பரிமாற அமராவதி உணவுடன் வந்தாள்.அப்போது அம்பிகாபதி, ''இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய....''  என பாடினான்.  அதாவது, ''சுமையுடன் வருவதால் மென்மையான உன் பாதம் தரையில் பட்டதும் நோகிறது. மேலும் நடந்தால் கொப்பளம் வருமே'' என்றான் அம்பிகாபதி. இது கேட்டு சோழன் கோபம் கொண்டான். கம்பர் சரஸ்வதியை தியானித்தபடி,  ''கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள்  தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்'' என பாடலை முடித்தார்.  அப்போது வீதியில், 'கிழங்கோ கிழங்கு'' என்று கூவிய படி பெண் ஒருத்தி சென்றாள். கிழங்கு விற்கும் அவள், சுமையால் பாதம் நோக நடப்பதை பாடல் தெரிவிப்பதாக கருதிய சோழன் சினம் தணிந்தான். அப்பெண் சாட்சாத் சரஸ்வதி தேவி என்பதை உணர்ந்த கம்பருக்கு கண்ணீர் பெருகியது.

கை தட்டு, சித்தி உண்டாகும்

Image
ஒரு குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். குரு சீடர்களுக்கு நற்போதனைகள் செய்வதுடன் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களும் கூறுவார். ஒரு நாள், சீடர்களில் ஒருவன், ‘‘குருவே! பக்தியில் முழுமையாக ஈடுபட என்ன செய்ய வேண்டும்? ஏகாந்த சித்தி ஏற்பட வேண்டுமானால் அதற்கு என்ன  வழியைக் கையாள வேண்டும்?’’ என்று கேட்டான். அவனைப் பார்த்து மெல்லச் சிரித்த குரு, ‘‘இறைவனிடம் பக்தி செலுத்த பல வழிகள் உள்ளன. அவரவர் மனப்பக்குவத்துக்கு ஏற்ப அந்தந்த வழி களில் முயன்றால் ஏகாந்த சித்தி ஏற்படும். மௌனமாக இறைவனை வழிபடுவது ஒரு முறை.  ஆனால், மனம் இறைவனிடம் ஒன்றாமல் சிதறுமானால், அதை அடக்க இன்னொரு வழி இருக்கிறது. அது கைகளைத் தட்டியபடி இறைவன் பாடல்களைப் பாடுவது. ஒரு மரத்தின் அடியிலிருந்து கை தட்டி னால் அம்மரக் கிளைகளில் இருக்கும் பறவைகள் நாலா பக்கங்களிலும் சிறகடித்துப் பறந்து போகும். அதைப்போல இறைவனின் லீலைகளையும் கரு ணையையும் பாடலாக பாடி  நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு கை தட்டினால் உன் மனத்திலுள்ள தீய சிந்தனைகளெல்லாம் அகன்றோடிவிடும்.  கைகளால் தாளம் போட்டுக் கொண்டே இறை நாம சங்கீர்த்தனம் செய். அப்போது...